யாழ். மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட திருப்பலி

61 0

யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நத்தார் தினத்தை முன்னிட்டு விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை  இன்றைய தினம் (25.12.2023) கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் யாழ். மரியன்னை பேராலயத்தில் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேரனாட் ஞானப்பிரகாசத்தினால் நத்தார்விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.இதன்போது ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இயேசு பாலன் பிறப்பை வெளிப்படுத்தும் பாலன் குடில் ஆயர்களால் ஒளியேற்றப்பட்டுள்ளது.

இந்த நத்தார் விசேட திருப்பலி நிகழ்வில் யாழ். மறை மாவட்ட குரு முதல்வர், அருட்தந்தையர்கள் ,வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.