வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, பல்வேறு பிரதேசங்களில் மக்களை ஏமாற்றி ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பண மோசடி செய்ததாகக் கூறப்படும் உடுநுவர உள்ளூராட்சி சபையின் (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தொழில் தருவதாக கூறி 3 இலட்சம் முதல் 10 இலட்சம் வரை பணம் பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
இவர் தொடர்பில் பேராதனை பொலிஸாருக்கு கிடைத்த 8 முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.