5 மில்லியன் ரூபாய் நிதி கொடுக்கப்படுமிடத்து ஒரு மாதத்திற்குள் காணிகள் திருப்பி வழங்கப்படும்

347 0

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் உள்ள மக்களின் காணிகளுக்கு 5 மில்லியன் ரூபாய் நிதி கொடுக்கப்படுமிடத்து ஒரு மாதத்திற்குள் காணிகள் திருப்பி வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு கடந்த சந்திப்பின் போது உறுதியளித்துள்ளதாக அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் பிரகாரம், மக்களின் காணிகளை வைகாசி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படியில், கேப்பாபுலவிலிருந்து 248 ஏக்கர் காணிகளும், சீனியாமோட்டையிலிருந்து 31 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்படவுள்ளது.அத்துடன், 5 மில்லியன் ரூபாய் நிதி, மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கீடு செய்து வழங்கப்படுமிடத்து , 189 ஏக்கர் தனியார் காணிகளும், ஒரு மாத காலத்துக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் பிரகாரம், மொத்தமாக 468 ஏக்கர் காணிகள், பாதுகாப்பு அமைச்சின் மூலமாக விடுவிக்கப்படும் என, மீள்குடியேற்ற அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.