தந்தை செல்வாவின் 119வது ஜனனதின நிகழ்வு யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள செல்வா சதுக்கத்தில் நடைபெற்றது.
இதன்போது தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடமாகாண சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதனிடையே, தந்தை செல்வநாயகம் என அழைக்கப்படும் தமிழரசுக்கட்சியின் தலைவரான செல்வநாயகத்தின் 119 ஆவது பிறந்ததினம் இன்று வவுனியா நகர மத்தியில் உள்ள அன்னாரது சிலையடியில் வட மாகாண சுகாதார அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை தலைவருமான ப. சத்தியலிங்கத்தின் தலைமையில் இடம்பெற்றது.
காலை 9 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் அன்னாரது சிலைக்கு மலர் மாலை அணிவத்ததுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் சுகாதார அமைச்சரினால் நினைவுரையும் நடத்தப்பட்டது.
இதன்போது தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


