இலங்கை மந்திரவாதி குவைட்டில் கைது

232 0

குவைட்டில் குற்றவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறி இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மந்திர செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் குறித்த இலங்கையர், அந்த நாட்டு குற்றவியல் தடுப்பு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குடும்பங்களை பிரிப்பதாகவும். காதலர்களை இணைப்பதாகவும் கூறி, குறித்த நபர் மோசடி செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் தடுத்து வைக்கப்பட்டு இரகசியமான முறையில் விசாணைகள் நடாத்தப்பட்டு வருவதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.