காத்தான்குடியில் ஐஸ் ப்போதைப்பொருள் வியாபாரி ஒருவரை 13 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று சனிக்கிழமை (16) இரவு கைது செய்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மாவட்ட குற்ற விசாணை பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற விசாணைப் பிரிவு பொலிஸ் குழுவினர் காத்தான்குடி கர்பலா பிரதேசத்திலுள்ள குறித்த வியாபாரியின் வீட்டை சோதனையிட்டனர் .
இதன்போது குறித்த வியாபாரியிடமிருந்து 13 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றியதையடுத்து அவரைக் கைது செய்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யயப்பட்ட சந்தேக நபரை 3 தினங்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.