சொகுசு பஸ் ஒன்று கார் மற்றும் சைக்கிளுடன் மோதி விபத்து – ஒருவர் பலி

128 0

கொழும்பில் இருந்து கட்டுநாயக்கவுக்கு  அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ் ஒன்று ஜா – எல பகுதியில்  கார் மற்றும் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதுடன் அவர் கந்தானை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய  நிபுன் தனஞ்சய என பொலிஸார் தெரிவித்தனர் .

சொகுசு பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே  விபத்து இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.