யாழில் குடும்பப்பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட முறன்பாடு காரணமாக தவரான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
மது அருந்த வேண்டாம் என கண்டித்த நிலையில் கணவன் மீண்டும் மது அருந்தியதால் மனைவி தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்.கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த 41 வயதையுடைய கஜேந்திரன் தர்சினி என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணின் கணவர் மதுப் பழக்கம் உடையவர். இந்நிலையில் அவரை மது அருந்த வேண்டாம் என மனைவி கண்டித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் மது அருந்தியதால் கடந்த 7ஆம் திகதி குறித்த பெண் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தனக்கு தானே தீ மூட்டியுள்ளார்.
இதன்போது அவரை காப்பாற்றிய அயலவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதற்கமைய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் நேற்று(16.12.2023) சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார்.