சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடி 3 சிறுமிகளும் பொலிஸ் பொறுப்பில்!

29 0

ஹிங்குராக்கொடவிலுள்ள  சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த மூன்று சிறுமிகள் தப்பியோடிய  நிலையில் அவர்கள் மூவரும்  கண்டுபிடிக்கப்பட்டு தமது பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக   ஹிங்குராகொட பொலிஸார் தெரிவித்தனர்.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத்  திணைக்களத்துக்குச்  சொந்தமான வீடு ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்த  மூன்று சிறுமிகளும் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு  இவர்கள் மூவரும் கண்டு பிடிக்கப்பட்டனர்.

13, 14 மற்றும் 16 வயதுடைய  மூன்று சிறுமிகளே இவ்வாறு தப்பியோடியிருந்தனர்.