காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் சம்பந்தன் நேரில் கோரிக்கை

237 0

வடக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள மக்களது காணிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியை சம்பந்தன் நேரில் சந்தித்து இவ் வேண்டுகோளை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டியதன் அவசியத்தை இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியதோடு, ராணுவ தளபதியிடமும் தொடர்புகொண்டு பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்றும் எனினும், அவற்றை எப்போது விடுவிப்பது என்பதிலேயே பிரச்சினை உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.