ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவராகிறார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

251 0

ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவராக அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அடுத்த வாரம் நிமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் 5 ஆம் திகதி கூடவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், கட்சியின் பிரதித் தலைவர்களாக மூன்று பேர் நியமிக்கப்படவுள்ளதாகவும், அவர்களில் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்சியின் ஏனைய விடயங்களிலும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் அந்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.