யாழ். பல்கலை கலைபீட மாணவர்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில்

250 0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைபீட மாணவர்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காரணமாக கலைப்பீடத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று காலை முதல் மாணவர்களால் உணவுத் தவிர்ப்ப போராட்டம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.