போதை பொருளுடன் இருவர் கைது

363 0

201607181208020574_three-arrested-counterfeit-notes-seized-near-Tanjore_SECVPFசட்டவிரோதமாக ஒரு தொகை போதைபொருளுடன் தனியார் பேருந்தில் பயணித்த ஒருவர் ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், பேருந்தில் வைத்திருந்த மதுசார போத்தல்கள் 10வும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக போதை பொருள் வார்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய ஒருவர் ஏறாவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சாவை தம்வசம வைத்திருந்த  21 வயதுடையவரே, ஏறாவூர் பழைய சந்தை வீதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.
இவரிடம் இருந்து 5000 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர் வீதிகளில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடம் இருந்து தகவல் கிடைத்ததின் பேரில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.