பேலியகொடை மீன் சந்தையின் தலைவர் ஒருவருக்கே தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து கப்பம் கேட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 22 கிராம் 970 மில்லிகிராம் போதைப்பொருள், 15 கிராம் 940 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கையடக்க தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து, 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

