கொஹுவலவில் சாரதியை தாக்கி கார் கடத்தல் ; மூவர் கைது!

110 0

காரை செலுத்திச்சென்று கொண்டிருந்தவரை அதே காரில் கடத்திச்சென்று குறித்த காரை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் நேற்று (05) கைது செய்துள்ளனர்.

கொஹுவல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பசுவத்த, தெஹிவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 மற்றும்  23 வயதுடையவர்களாவர்.

இவர்கள் பணம் பெறும் நோக்கில் குறித்த காரை கடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.