இரண்டு யானைகளை கொன்ற குற்றச்சாட்டில் பொலிஸில் சரணடைந்த தம்பதியரில் கணவனுக்கு விளக்கமறியல்!

134 0
தெவநுவரவில்  தனியார் காணி ஒன்றில் பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில்  இரண்டு  காட்டு யானைகளைக்  கொன்ற குற்றச்சாட்டுக்குள்ளான நிலையில்,  கருவலகஸ்வெவ பொலிஸில் சரணடைந்த  ஒருவரை  எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதிவான் நேற்று (04)  உத்தரவிட்டார்.

அவரது மனைவியை  இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கவும் உத்தரவிட்பட்டுள்ளது.

கருவலகஸ்வெவ தப்போவ தெவநுவர பகுதியைச் சேர்ந்த ஜயசூரிய முதியன்சேலாகே குமாரசிங்க ஜயசூரிய என்ற 53 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்படடுள்ளார்.

சந்தேக நபரின் மனைவியை அவரது  இரண்டு சிறு பிள்ளைகளையும் கருத்தில் கொண்டு இரண்டு இலட்சம் ரூபா  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.