இராணுவத்தில் பெண்கள் உயர் பதவியைப் பெறும் வகையில் மாற்றங்கள் வருகின்றன!

135 0
இராணுவ மகளிர் படை அணிக்கான  நடைமுறைகள்  புதுப்பிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெண் இராணுவ அதிகாரிகள் இராணுவத்தின் உயர் பதவிக்கு  தெரிவாகும் வகையில் நடைமுறைகள் மாற்றப்படும்  எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

இன்று நாம் இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பற்றிப் பேசுகிறோம். பெண்கள் உயர் பதவிகளுக்கு வரவதற்கான  வழிகள் உள்ளன. ஆனால் சில இடங்களில் பிரச்சினைகள் உள்ளன. இதனடிப்படையிலேயே ஆயுதப்படையில் சேவையாற்றும்  பெண் அதிகாரி உயர் பதவிக்கு செல்லும் வகையில் எதிர்காலத்தில் சில  மாற்றங்களைச் செய்யவுள்ளளோம்.

இது தொடர்பான வரைவு தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபர்  திணைக்களத்துக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.