ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் சிலவற்றுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதி வரை இன்று (05) நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

