அரச அதிகாரிகள் தவறு செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை- மைத்திரி

435 0

tkn-11-28-rs-13-pgiநல்லாட்சியின் பின்னணியில் அரசியல்வாதிகளோ, அரச அதிகாரிகளோ தவறு செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அனைவரும் தமது மனசாட்சிக்கு அமைய வேலை செய்ய வேண்டும்.அவ்வாறு இல்லாது போனால் நல்லாட்சி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை சிதைந்துவிடும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.இதேவேளை, நல்லாட்சி மற்றும் நல்லிணக்க கருத்துக்களை வெற்றிக்கொண்ட நாடு மக்களை வென்றெடுக்க அனைத்து தியாகங்களையும் செய்ய வேண்டியது அனைவரினதும் கடமை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.