நுவரெலிய மாவட்டம் வட்டவளையில்  சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது(காணொளி)

227 0

நுவரெலிய மாவட்டம் வட்டவளையில்  சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்ய்ப்பட்டுள்ளனர்.

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை சிங்கள வித்தியாலயத்திற்கு அண்மித்த பகுதியில் வீட்டு வளாகத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேக நபர்கள் இருவரை வட்டவளை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ; சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 5 கஞ்சா செடிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் தனது வீட்டு முற்றத்தில் இச்செடிகளை வளர்த்து வந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த கஞ்சா செடிகளையும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் ஹட்டன் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.