வவுனியா கள்ளிக்குளத்தில் யானை தாக்கி சேதப்படுத்திய வீடுகளை பார்வையிட்டார் ப.சத்தியலிங்கம்(காணொளி)

255 0

வவுனியா கள்ளிக்குளத்தில் யானை தாக்கி சேதப்படுத்திய வீடுகளை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பார்வையிட்டார்.

கள்ளிக்குளம் கிரமத்திற்குள்; புகுந்த யானை அங்கிருந்த 4 வீடுகளை சேதப்படுத்தியதுடன் பயன்தரு மரங்களையும் சேதப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் யானை சேதப்படுத்திய குறித்த வீடுகளை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களளயும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள் அரசினால் வழங்கப்படும் நிவாரணங்களை பெறுவதற்கு ஆவண செய்வதாக தெரிவித்திருந்த வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் அங்கு பிரசன்னமாகியிருந்த சமுர்த்தி உத்தியோகத்தரிடமும் கிராமத்தின் நிலைமை தொடர்பாக கேட்டறிந்தார்.

இதேவேளை அம் மக்களுக்கான வீட்டுத்திட்டம் தொடர்பாகவும் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துரையாடிய வடக்கு மாகாண சுகாதார அமைச்சர், தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டத்தினை பெறுவதற்கு மக்கள் சம்மதம் தெரிவிக்கின்றனரா எனவும் கேட்டறிந்துகொண்டதுடன் இவ்விடயம் தொடர்பாக மக்கள் கலந்துரையாடி முடிவெடுக்மாறும் கேட:டுக்கொண்டார்.