காணமால் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும்- வடக்கு மாகாண முதலமைச்சர் (காணொளி)

269 0

காணமால் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என அரசாங்கத்தைக் கோர இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இதுவரை நடைமுறைப்படுத்தும் விடயங்கள் கேள்விக்குறியாக இருக்கிறது என்று குறிப்பிட்ட முதலமைச்சர், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக நிலுவையிலுள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அரசாங்கத்தைக் கோரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.