கடந்த ஜனாதிபதி தேர்தல் – அரச பேருந்துகள் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை

232 0

கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்காக அரச பேருந்துகளை பயன்படுத்தி அதற்கான பணம் செலுத்தப்படாமை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

142 மில்லியன் ரூபா செலுத்தப்படாமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்ற நீதிபதி சிரான் குணரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிர்ப்பினை தெரிவிப்பதற்காக மே மாதம் 23 ஆம் திகதி வரை வழக்கு விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.