சாதாரணமானவரா மஹிந்த – பசில்

266 0

காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்யக் கூடிய சாதாரண நபரா மஹிந்த ராஜபக்ச என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ச என்பவர் தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்தவர். அவரது முழுக்குடும்பத்தையும் தேசத்திற்காக தியாகம் செய்தவர்.

அவ்வாறான ஒரு நபரை தொடர்ந்தும் முறைகேடாக நடாத்துகின்றார்கள். விசாரணைகள் செய்து கொண்டு வருகின்றார்கள்.

ஆனால் இவை அனைத்தையும் கண்டு மஹிந்த பொறுமையாக இருக்கின்றார். நாட்டு மக்களுக்காக தன்னை தியாகம் செய்து கொண்டதாலேயே அவர் பொறுமையாக இருக்கின்றார்.

அதேபோன்று எத்தனை விதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், சிறைச்சாலைகளில் அடைத்தாலும் நாம் ஓயப் போவதில்லை எனவும் பசில் குறிப்பிட்டார்.