அல்ஷிபா மருத்துவமனையிலிருந்து வெளியே செல்லமுயற்சிப்பவர்கள் மீது இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்கின்றனர் என எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை வெளியிடும் இந்த தருணத்தில் மருத்துவமனையிலிருந்து வெளியே செல்ல முயல்பவர்கள் இஸ்ரேலிய படையினரால் சுடப்படுவதை எங்கள் பணியாளர்கள் பார்க்கின்றனர் என எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அல்குட் மருத்துவமனையிலிருந்து 20 மீற்றர் தொலைவில் இஸ்ரேலிய டாங்கிகள் காணப்படுகின்றன என செம்பிறைச்சங்கம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையை நோக்கி நேரடி துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுகின்றது இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் காணப்படுகின்றது.

