நடிகர் ரஜினிக்காந் யாழ்ப்பாணத்திற்கு வராமல் தடுக்கப்பட்டதை எதிர்த்து நேற்று மாலை ரஜனிகாந் ஆதரவாளர்களால் கண்டன ஊர்வலம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக கலைஞர் ரஜனிகாந் யாழ்ப்பாணத்திற்கு வருகைதர வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஐநூறு பேர் வரை வருகைதந்திருந்தனர்.