கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை

226 0

அம்பதல நீர் சுத்தரிப்பு நிலையத்தில் இருந்து நீர் விநியோகம் செய்யும் பிரதேசங்களுக்கு நாளை 15 மணி நேரம், நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, காலை 9.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணிவரை நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவலை மாநகர சபை பிரதேசங்கள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியாவ மற்றும் இரத்மலானை ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.