ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்த முற்பட்ட பாகிஸ்தானிய பொதுமகன் ஒருவர் கைது

226 0
ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்த முற்பட்ட பாகிஸ்தானிய பொதுமகன் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வானூர்தி தள காவல்துறையினர் அவரை கைது செய்ததாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
27 வயதான குறித்த பாகிஸ்தானியர் கராச்சியில் இருந்து 1.4 கிலோ கிராம் பெறுமதியான ஹெரோயினை கடத்தி முற்பட்டுள்ளார்.
அவர் தமது பயணப்பொதியில் இதனை மறைத்து கடத்த முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஹெரோய்னின் பெறுமதி 14 மில்லியன் ரூபாய் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.