தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களை..(காணொளி)

296 0

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களை, மக்கள் பிரதிநிதிகள் சிலர் சந்தித்துள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் இன்று 27ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் தமது காணிகளை விடுவிக்கக்கோரி, கேப்பாப்பிலவு மக்கள்

தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புக்களும், நிறுவனங்களும், அரசியல் பிரமுகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கமைய நேற்றையதினம் கேப்பாபிலவு மக்களுக்கும், சில மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றது.