திருடப்பட்ட நீர் இறைக்கும் மோட்டார்களுடன் சந்தேகநபர் கைது !

86 0

யாழ்ப்பாணம் நெல்லியடியில் நீர் இறைக்கும் மோட்டார்களை திருடிய இளைஞர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 5 தண்ணீர் இறைக்கும் மோட்டார்கள் மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிசார் தெரிவித்தனர்.

துன்னாலை குடவத்தைப்  பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நெல்லியடிப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

குறித்த நபரை பருத்தித்துறை  நீதிமன்றத்தில்  முற்படுத்த உள்ளதாக பொலிசார்  தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது .