வவுனியா மதினா நகரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நடவடிக்கை(காணொளி)

277 0

வவுனியா மதினா நகரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரத்தில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகாறம்பைக்குளம் கிரமசேவகர் பிரிவுக்குட்பட்ட, மதினா நகர் பகுதியில் நேற்று மதினாநகர் பள்ளிவாசல் தலைவர் அ.முகமட் பைசர் தலைமையில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மதினாநகர் பள்ளிவாசல் சுற்றுப்புறச் சுழல் மற்றும் கிராமத்தில் டெங்கு நுளம்பு பரவக் கூடியதாக இனங்காணப்பட்ட இடங்கள் அனைத்தும் துப்பரவு செய்யப்பட்டன.

பொதுசுகாதார பரிசோதகர் ஏ.ஜெ.எர்சன் ஜோயின் அறிவுறுத்தலுக்கு அமைய கிராம உத்தியோகத்தர் சி.ரவீந்திரன் ஏற்பாடு செய்த சிரமதானப்பணியை மகாரம்பைக்குளம் சுகாதார உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர் ஜெயராம் துர்க்கா, மற்றும் மகாரம்பைக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் பார்வையிட்டிருந்ததுடன் அறிவுறுத்தல்களையும் வழங்கியிருந்தனர்.