வவுனியாவில் அடிப்படை வசதிகள் கோரி அரச வீட்டுத்திட்ட மக்கள் போராட்டத்தில்..(காணொளி)

269 0

வவுனியாவில் அடிப்படை வசதிகள் கோரி அரச வீட்டுத்திட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் ஓமந்தை அரச வீட்டுத்திட்ட மக்கள் அடிப்படை வசதிகளை தமக்கு செய்து தரக்கோரி நேற்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்களாக பணிபுரிவோருக்கு வதிவிடங்களை அமைப்பதற்காக ஓமந்தை பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் காணிகள் வழங்கப்படடிருந்தன.

700 அரச உத்தியோகத்தர்களுக்கு காணிகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போதுவரை 65 குடும்பங்களே அங்கு குடியேறியுள்ளன.

இந்நிலையில் மக்கள் குடியேறாத காணிகள் பற்றைக்காடுகளாக காப்படுவதால் காட்டு விலங்குகளின் ஆபத்து காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமது குடிமனைகளுக்கான வீதிகள் செப்பனிடப்படவில்லை எனவும், வீதி மின் விளக்ககள் பொருத்தப்படவில்லை எனவும் மக்கள் குடியேறாத காணிகளை வேறு உத்தியோகத்தர்களுக்கு மாற்றி வழங்ககோரியும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சுமார் 30 நிமிடங்கள் அமைதியான முறையில் பாதாதைகளை ஏந்தியாவாறு வீட்டுத்திட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியில் நின்றிருந்தனர்.

இவர்களுடன் வன்னி மாவட்ட பாராமன்ற உறுப்பினர்களான சிவக்தி ஆனந்தன் மற்றும் சி. சிவமோகன் ஆகியோர் கலந்துரையாடியதுடன் குறித்த விடயங்கள் தொடர்பாக வவுனியா அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனவும் உறுதியளித்திருந்ததை அடுத்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றிருந்தனர்.