பொது மக்களை மறக்கும் அரசியல் வாதிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – நிலூகா

233 0

பொது மக்களை மறக்கும் அரசியல் வாதிகளுக்கு பொது மக்கள் தக்க சமயத்தில் பாடம் புகட்டுவார்கள் என மத்திய மாகாண ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கம் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச மகளிர் தின விழா நேற்று ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் வருந்தும் போது மக்கள் துயரடையும் போது மக்கள் அழும் போது அரசியல் வாதிகள் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பது தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் அண்மையில் ஆய்வினை மேற்கொண்டதாகவும் அதில் அரசியல் வாதிகள் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்