வரலாற்றில் முதல் தடவையாக அரசாங்கத்தின் மீது வழக்கு தாக்கல்

226 0
மத்திய வங்கியின் முறி மோசடியுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதில் ஐக்கிய தேசியகட்சி பின்னிற்கப் போவதில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசியகட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் இதனைத் தெரிவித்தார்.

ஹோமகமவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
வரலாற்றில் முதல் தடவையாக அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை விசாரணை நடத்த, கோப் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் வரலாற்றில் முதல் தடவையாக அரசாங்கத்தின் மீது வழக்கு தாக்கல் செய்யவும் இடமளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார்.