வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள இராணுவ முகாம்களின் முன்பாக இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

310 0

v2வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள இராணுவ முகாம்களின் முன்பாக, இன்று இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வாய்களை கறுப்பு நிற துணிகளால் கட்டியவாறு ஊர்வலமாக வந்த இளைஞர் – யுவதிகள், வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை இராணுவம் மக்களின் காணிகளை அபகரித்துள்ளமையினால் வடபகுதி மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதுடன் முகாம்களிலும் உறவினர்களின் விடகளிலும் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

v4

காணிப் பிரச்சினையில் அரசியல் நாடகம் வேண்டாம், இராணுவம் ஆக்கிரமித்த காணிகளை உடனடியாக விடுதலை செய், நல்லாட்சியே மாற்றத்தை நாம் தந்தோம் மறந்துவிட்டாய், போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர். சுமார் 30 நிமிடங்கள் வரை இராணுவ முகமுக்கு முன்பாக இடம்பெற்ற இப்போராட்டத்தை அடுத்து போராட்டக்காரர்கள், வடக்கு நோக்கி பயணித்தனர்.அவர்கள் இன்று பிற்பகல் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாகவும், இரணைமடு 57 ஆவது டிவிசன் தலைமையகம் முன்பாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒமந்தை பழைய சோதனைச்சாவடி மற்றும் திருவையாறு பகுதியிலுள்ள இராணுவ முகாம்களிற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதாகவும், காங்கேசன்துறை இராணுவ முகாமிற்கு முன்னால் இந்தப் போராட்டம் நிறைவடையவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.

v1  v3  v5