தமிழ் அகதிகளுக்கு சமூக நலத் திட்டம் பழ. நெடுமாறன் வரவேற்பு

391 0

Nedumaranதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தமிழக அரசின் வரவு-செலவு திட்டத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சமூக நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.

அதைப்போல அவர்களின் குழந்தைகள் தமிழக அரசுப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மற்றும் மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்ந்து படிக்க அனுமதிக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

வேளாண்மை உற்பத்தி பெருக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கான திட்டம் இணைந்து செயற்படுத்தப்பட்டால்தான் விவசாயிகளின் பொருளாதார நிலை உயரும்.

கல்விக்கான நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. இது ஏற்கத்தக்கதன்று. மூடப்பட்ட அரசு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். குறைந்த அளவு தொடக்கப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வித் திட்டம் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. என தெரிவித்துள்ளார்.