கலைப்பீட பரீட்சைகள் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் – யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்

299 0

jannnnnnn-720x480யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட பரீட்சைகள் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும். அதேபோல் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்துப் பீடங்களும் படிப்படியாக விரைவாக ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நேற்றுத் தெரிவித்தார்.

திங்கட்கிழமை கலைப்பீடம், முகாமைத்துவ வணிக பீடம் உள்ளிட்ட சில பீடங்களில் கல்விக் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியுமா என நேற்று பீடாதிபதிகளுடன் ஆராயப்பட்டது.

மேலும் சில நாட்கள் பொறுத்திருந்து சுமூக நிலையொன்று ஏற்படுத்தப்பட்டபின்னர் இப்பீடங்களின் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம் என பீடாதிபதிகள் தெரிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட மருத்துவ, விஞ்ஞான, பொறியியல் பீடங்கள் மற்றும் ஏனைய சில துறைகளின் கல்விச் செயற்பாடுகள் சுமுகமாக இடம்பெற்று வருகின்றன. மாணவர்கள் வருகையும் சிறப்பானவே உள்ளது என அவர் கூறினார்.