அவதூறு வழக்கில் கைது செய்யாமல் இருக்க பிரேமலதாவுக்கு ஜாமின்

358 0

201607221305324592_premalatha-vijayakanth-be-detained-without-bail-The_SECVPFதிருப்பூர் 1-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவதூறு வழக்கில் கைது செய்யாமல் இருக்க பிரேமலதாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் தேர்தல் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.அப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவர் அவதூறாக பேசியதாக அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பிரேமலதா விஜயகாந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருப்பூர் 1-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க பிரேமலதா விஜயகாந்த் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதன்படி, திருப்பூர் கோர்ட்டில் ஆஜராகி ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என்று ஐகோர்ட்டு அறிவித்தது. ஐகோர்ட்டு உத்தரவு நகலுடன் பிரேமலதா விஜயகாந்த் இன்று திருப்பூர் 1-வது கூடுதல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜரானார். அவருக்கு வழக்கில் கைது செய்யலாம் இருக்க ஜாமின் கொடுக்கப்பட்டது. பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது-

முன்னாள் அமைச்சரால் போடப்பட்ட பொய் வழக்கு இது. நாங்கள் சட்டத்தை மதித்து இன்று கோர்ட்டில் ஆஜராகி உள்ளோம். வரி இல்லாத பட்ஜெட்டாக இருந்தாலும் ஏற்கனவே 1 லட்சம் கடனுக்கு மேல் தமிழ்நாடு கடனில் உள்ளது. அதுவே மக்களுக்கு வலியை ஏற்படுத்தக்கூடியதுதான்.

உள்ளாட்சி தேர்தலில் முரசு சின்னத்தில் கண்டிப்பாக போட்டியிடுவோம். சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் தொகுதி பங்கீடுதான் செய்திருந்தோம். அது முடிந்து விட்டது. உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் விஜயகாந்த் அறிவிப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.