தேசிய நல்லிணக்கத்துக்கான செயலணி என்ற பெயரில் எந்த நிறுவனமும் இல்லை

332 0

ranil-prime-ministerதேசிய நல்­லி­ணக்­கத்­துக்­கான செய­லணி என்ற பெயரில் எந்த நிறு­வ­னமும் இல்லை. அவ்­வா­றா­ன­தொரு செய­லணி நிறு­வப்­பட்­டமை தொடர்­பா­கவோ, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க அதற்கு தலைமை தாங்­கு­கின்­றமை குறித்தோ எனக்கு எதுவும் தெரி­யாது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் தெரி­வித்தார்.

நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­க­ளுக்கு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா அல்லமஹிந்த ராஜ­பக்ஷ தலைமை தாங்­கி­னாலும் அதற்கு நாங்கள் எதிர்ப்பு வெளி­யி­டப்­போ­வ­தில்லைஎன்றும் அவர் குறிப்பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தின் போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி எம்.பி.யான விமல் வீர­வன்ச எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கையிலேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வத்தார்.

விமல் வீர­வன்ஸ எம்.பி, தேசிய நல்­லி­ணக்­கத்­துக்­கான செய­லணி என்ற நிறு­வ­ன­மொன்று நிறு­வப்­பட்­டுள்­ளதா என்றும் அது அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்தின் கீழ் நிறு­வப்­பட்­டதா என்று கேள்­வி­யெ­ழுப்­பினார்.

இக்­கேள்­விக்கு பதி­ல­ளித்த தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் பிரதி அமைச்சர் நிரோஷன் பெரே­ரா அவ்­வா­றான நிறு­வ­ன­மொன்று நிறு­வப்­ப­ட­வில்லை என பதி­ல­ளித்தார்.

இச்­ச­ம­யத்தில் விமல் வீர­வன்ஸ எம்.பி, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவின் தலை­மையில் அவ்­வா­றா­ன­தொரு நிறு­வனம் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தாக ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­யி­கா­யி­ருக்­கின்­றன. தாங்கள் அவ்­வாறு நிறு­வப்­ப­ட­வில்லை என்று கூறு­கின்­றீர்­களே என்று கேள்வி எழுப்பினார்.

இதன்­போது, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க குறிப்பிடுகையில்சந்­தி­ரிக்கா தலை­மையில் அவ்­வா­றான செய­ல­ணி­யொன்று நிறு­வப்­பட்­டமை பற்றி எனக்­குத்­தெ­ரி­யாது. சந்­த­ரிகா உங்­க­ளு­டைய ( வீர­வன்­சவின்) பழைய நண்பர். கடந்த காலத்தில் இரு­வரும் இணைந்து அர­சாங்­க­மொன்­றையும் அமைத்­துள்­ளீர்கள். ஆகவே முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­க­வி­டமே அது பற்றி தொலை­பேசி மூலம் தொடர்பு கொண்டு அறிந்­துக்­கொள்­ளுங்­களேன் என்றார்.

அதன்­போது , சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க எனக்கு பழைய நண்பர். எனினும் உங்­க­ளுக்கே(பிர­த­ம­ருக்கே) எனக் கூறிய விமல் வீர­வன்ச எம்.பி ஊட­கங்­களில் வந்­தி­ருந்த செய்தி தொடர்­பா­கவே நான் கேள்வி எழுப்­பு­கின்றேன் என்றார்.

இதன்­போ­து நீங்கள் நல்­லி­ணக்கம் மற்றும் சமா­தா­னத்தை எதிர்க்­கி­றீர்­களா? சந்­தி­ரிக்க குமா­ர­துங்க அல்­லது மஹிந்த ராஜ­பக்ஷ என யார் தலை­மை­யி­லா­வது நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது என்­பது நல்ல விட­யமே. அதை நீங்கள் எதிர்க்­கி­றீர்­களா? நீங்கள் ஒரு காலத்தில் சர்­வ­தேச போர்க்­குற்ற நீதி­மன்றம் வரு­வதை விரும்­பி­னீர்கள். ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிறி­சேன வந்­ததன் பின்னர் தற்­போது அந்த பிரச்­சி­னையும் இல்­லாமல் போயுள்­ளது என விமல் வீர­வன்­ஸவைப் பார்த்து பிர­தமர் குறிப்­பிட்டார்.

அச்­ச­ம­யத்தில் கடும் தொனியில் விமல் எம்.பி, குறிப்பிடுகையில்மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சி­கா­லத்தில் தான் நாடு ஒரு­மைப்­ப­டுத்­தப்­பட்டு உண்­மை­யான நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் அப்­போது சிங்­கள மாண­வர்கள் தமி­ழர்­களால் தாக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. தற்­போ­தைய அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்­கத்தின் கீழ் தான் அங்கு சிங்­கள மாண­வர்கள் தாக்­கப்­ப­டு­கின்­றனர்.

மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்கம் எச்­சந்­தர்ப்­பத்­திலும் சர்­வ­தேச போர்க்­குற்ற நீதி­மன்­றத்தை கொண்டு வரு­வ­தற்கு செயற்­பட்­டி­ருக்­க­வில்லை. நீங்­கள் ச­பையை தவ­றாக வழி­ந­டத்த வேண்டாம் என்றார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறை­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட வேளையில் ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் பான் கீ-மூ­னுடன் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ கைச்­சாத்­திட்ட கூட்டு ஒப்­பந்­தத்தின் மூலமும், இலங்கை தொடர்­பான ஐ.நா. நிபுணர் குழுவின் தலை­வ­ராக இருந்த தருஸ்­ம­னுடன் அப்­போ­தைய சட்ட மா அதி­ப­ரா­க­வி­ருந்த மொஹான் பீரிஸ் சென்று பேசி­யதன் ஊடா­கவும் கடந்த அர­சாங்கம் சர்­வ­தேச போர்க்­குற்ற நீதி­மன்­றத்தை கொண்டு வரு­வ­தற்கு உடன்­பட்­டி­ருந்­த­தமை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

2009 ஆம் ஆண்டு பான் கீ- மூ­னுடன் ஏற்­ப­டுத்திக் கொண்ட கூட்டு ஒப்­பந்தின் மூலம் சர்­வ­தேச போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு உடன்பட்டிருந்தீர்கள். சட்ட மா அதிபர் என்ற வகையில் மொஹான் பீரிஸ் தருஸ்மனுடன் என்ன பேசினார் என்று தேடிப்பார்த்தால் அது புரியும். எனினும் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு தாமும் செல்ல வேண்டிவரும் என்ற பின்னர் தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புன்னகைத்தவாறே தெரிவித்ததோடு நீங்கள் குறிப்பிடும் படியாக எவ்விதமான நிறுவனமும் இல்லை என மீண்டும் தெரிவித்து அமர்ந்தார்.