மேலும் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த நிலையில் காணப்பட்ட 3 வயதான கன்றுக்குட்டிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த இடத்தில் சட்ட விரோதமான முறையில் கால்நடைகளை அறுத்து, நகரிலுள்ள மாட்டிறைச்சி கடைகளுக்கு இறைச்சி வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பதுளை விசேட பொலிஸ் பணியகத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

