நளினியின் மனு மீண்டும் தள்ளுபடி

401 0

08-1457418211-nalini84-600ராஜிவ் காந்தி கொலை வழங்கில் 25 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி முருகனின் மனுவை சென்னை மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

20 வருடங்களுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்யும் தமிழக அரசாங்கத்தின் உத்தரவின் அடிப்படையில் தம்மை விடுவிக்க, தமிழக அரசாங்கத்துக்கு பரிந்துரைக்குமாறு கோரி, நளினி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் இறுதி விசாரணை நேற்று சென்னை மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது நளினியை விடுதலை செய்யுமாறு பரிந்துரைக்க நீதினமன்றத்தினால் முடியாது என்று தெரிவித்து, சென்னை மேல் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.