மன்னம்பிட்டிபாலத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11ஆக அதிகரிப்பு

81 0
image

கதுருவெலயிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று  மன்னம்பிட்டிய கொட்டாலிய பாலத்திலிருந்து ஹந்தப்பன நீர்பாயும் கால்வாயில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

இந்தப் பாலத்தில் பஸ் சென்று கொண்டிருந்தபோது பாலத்திலிருந்து  கவிழ்ந்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருள் சூழ்ந்ததால் காயமடைந்தவர்களை மீட்பதில் சிரமம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.