பேர்லின் தமிழாலயத்தின் மாணவர்கள் கராத்தே போட்டியிலும் பதக்கங்களைத் தமதாக்கி கொண்டனர் .

762 0

பேர்லின் இளம் சந்ததிக்கான கராத்தே போட்டியில் ஈழத்தமிழ் அடையாளத்தின் பெருமையுடன் பங்குகொண்ட எமது சிறார்கள் !
மேஐர் பாரதி கலைக்கூடத்தால் ஆரம்பிக்கப்பட்ட கரேத்தே பள்ளி மாணவர்கள் நேற்றைய தினம் பேர்லின் மாநிலத்தில் நடைபெற்ற இளம் சந்ததிக்கான கராத்தே போட்டியில் பங்குபெற்று சில பதக்கங்களையும் தமதாக்கி கொண்டனர். 250 க்கும் மேற்பட்ட பல்லின சிறார்களுக்கிடையே , வயதுப்பிரிவு மற்றும் பட்டியின் நிறத்தி்ன் அடிப்படையில் பல பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் எமது தமிழ்ச் சிறார்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பங்குபற்றியது பெருமைக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து சிறார்களும் பேர்லின் தமிழாலயத்தின் மாணவர்களும் என்பது குறிப்பிடத்தக்கது.