பயணிகள் விமானமொன்றின் என்ஜினுக்குள் உள்ளிழுக்கப்பட்ட நபர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
டெக்ஸாஸ் மாநிலத்தின் சான் அன்டோனியோ சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்டா எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பிளைட் 1111 விமானம், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து வந்து மேற்படி விமான நிலையத்தில் தரையிறங்கியிருந்தது.
பின்னர், ஏ319 ரகத்தைச் சேர்ந்த மேற்படி விமானம் விமான நிலையத்தின் வாயிலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. விமானத்தின் ஓர் என்ஜின் அவ்வேளையில் இயங்கிக் கொண்டிருந்தது.
இதன்போது விமான ஊழியர் ஒருவர், மேற்படி விமான என்ஜினின் சுழல்விசையினால் உள்ளிழுக்கப்பட்டு, என்ஜினில் சிக்கி அவர் உயிரிழந்தார் என அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது