ஜூலை இறுதியில் O/L விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி ஆரம்பிக்கப்படும்

65 0
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்தவுடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்களை ஜூலை மாத இறுதியில் இருந்து மதிப்பீடு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.பரீட்சை பெறுபேறுகளை மாணவர்களுக்கு விரைவில் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுப்பதாகவும், க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது 37 பாடசாலைகளில் இடம்பெற்று வருகின்றது.