ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் இகாசுச்சி, நேற்று உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
இகாசுச்சி டிடி-107 கப்பல் 207 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.
கப்பலின் கப்டன், மேற்கு கடற்படை தலைமையகத்தில் நேற்று, மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்தார்.
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் இகாசுச்சி டிடி-107 கப்பல் இன்று நாட்டில் இருந்து புறப்படுகிறது.

