உயிர்த்த ஞாயிறுதாக்குதல் – தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்க தவறிய பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம்

62 0

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்த போதிலும் அது குறித்து நடவடிக்கை எடுக்க தவறிய பொலிஸ்உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ்சார்ஜன்ட் ஒருவரே பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.கட்டான பொலிஸ்நிலையத்தை சேர்ந்த புலனாய்வுபிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகளின் போது குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு முன்கூட்டியே தாக்குதல் கிடைத்தபோதிலும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனைதொடர்ந்து அவருக்கு எதிராக பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்