கனடாவில் டிரக் பேருந்து மீது மோதியதில் 15 பேர் உயிரிழப்பு

61 0
கனடாவின் மனிட்டோபா மாகாணத்தில் சிரேஸ்ட பிரஜைகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தும் டிரக்கும் மோதி விபத்துக்குள்ளானதில் 15க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

வின்னிபெக்கிற்கு மேற்கே சுமார் 170 கிலோமீற்றர் தொலைவில் கார்பெரி;க்கு வடக்கே இரண்டு நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடம்த்தில் டிரக் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற உடனேயே பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்பதை நாங்கள் உணர்ந்தோம் கனடாவின் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

15 பேர் உயிரிழந்துள்ளனர் 10 பேர் மருத்துவமனைகளிற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் பல அம்புலன்ஸ்களையும் பணியில் அமர்த்தியுள்ளதுடன் காயமடைந்தவர்கள் வான்மார்க்கமாகவும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மனிட்டோபா இதற்கு முன்னர் இவ்வாறான பெருமளவு உயிரிழப்புகளை சந்தித்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் அனேகமானவர்கள் சிரேஸ்ட பிரஜைகள் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.