கண்டி – மெனிக்ஹின்ன பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு (14) இடம்பெற்றுள்ளது. வயல் காணி ஒன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெடிபொருள் ஒன்றைப் பயன்படுத்தி, குறித்த நபர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
மெனிக்ஹின்ன – கல்கடுவ பகுதியைச் சேர்ந்த 36 வயதான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

