யானையை ஏற்றிச் செல்ல தாய்லாந்து விமானம் வருகிறது !

159 0
முத்துராஜா என்ற  யானையை (சக்சுக்ரின்)  ஏற்றிச்  செல்வதற்காக தாய்லாந்து ஏர்லைன்ஸின் சிறப்பு சரக்கு விமானம் இம்மாதம் 24 ஆம் திகதி  இலங்கைக்கு வரவுள்ளது.

இந்த யானை கட்டுநாயக்காவிலிருந்து சியன்மாய் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இதற்கான விமானப் பயண நேரம் 6 மணி நேரமாகும்.

இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த  முத்துராஜாவுக்கு சிகிச்சைய ளிக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் யானையை மீண்டும் அழைத்துச் செல்லப்படவுள்ளது.